பொதுவாக 60 வதுகளின் பின்னர் ஞாபக மறதி உள்ளிட்ட குணப்படுத்த முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் அல்சைமர் நோயினை குணப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் புதிய வழியை கண்டறிந்துள்ளனர்.
மனித மூளை செல்களின் மரபணுக்களில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் அல்சைமர் நோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக மனித மூளைக்குள் மரபணுக்களை மாற்றுவதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்
இவ்வாறு மேற்கொள்ளப்படும் மரபணு மாறுபாடு அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
அல்சைமர் நோய்க்கான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படாத போதும் ஒரு முன்னணி கோட்பாடு, மூளை செல்களுக்கு வெளியே பீட்டா-அமிலாய்ட் எனப்படும் புரதத்தை உருவாக்குவதன் மூலம் இவ் நோய் நிலைமை தூண்டப்படுவதாக தெரிவிக்கின்றது.
எனினும் மனித நரம்பு செல்களில் A673T எனப்படும் ஒரு முக்கிய மரபணு இந்த புரதத்தின் உருவாக்கத்தை குறைப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
A673T முதன்முதலில் 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டது, இவ் மரபணுவை கொண்டவர்கள் அல்சைமர் வருவதற்கு நான்கு மடங்கு குறைவாக வாய்ப்பை உடையவர்களாக உள்ளனர்.
இதற்கமைய மூளையின் உயிரணுக்களில் இந்த மரபணு மாறுபாட்டை ஏற்படுத்தினால் பீட்டா-அமிலாய்டு உற்பத்தியைக் குறைத்து அதன் மூலம் அல்சைமர் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
ஆல்சைமர் நோய் (Alzheimer disease)
ஆல்சைமர் நோய் (Alzheimer disease) நரம்பியல் சிதைவுகளால் ஏற்படும், மெதுவாக ஆரம்பித்து, நாட்கள் செல்கையில் மோசமான நிலைமைக்கு நகரும் ஒரு நாட்பட்ட நோயாகும்
இது அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும். 60-70 % ஆன மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதாகும்
2006 ஆம் ஆண்டில் உலகம் முழுதும் 26.6 மில்லியன் மக்கள் இந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 2050 ஆம் ஆண்டில் இது நான்கு மடங்காகக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM