யாழில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்ட சிவப்பு - மஞ்சள் கொடிகள் அகற்றப்பட்டன

27 Nov, 2020 | 08:31 PM
image

யாழ். பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில், போரில் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களது நினைவாக  இன்று தமது வீட்டில் நினைவேந்தலை முன்னெடுக்க ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் திடீரென இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோடிக்கப்பட்டிருந்த சிவப்பு-மஞ்சள் கொடிகளை அகற்ற வைத்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரில் இறந்தவர்களின் நினைவாக வருடா வருடம் நினைவேந்தல் நடத்தும் இன்று  நவம்பர்-27 அன்று தமது வீட்டில் அவர்களது இறந்தவர்களின் படத்தை வைத்து சிவப்பு-மஞ்சள் கொடிகளால் அலங்காரம் செய்து நினைவேந்தலுக்கு தயார் செய்திருந்த நிலையில்  நண்பகல் திடீரென சென்ற இராணுவத்தினரால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் நினைவேந்துமாறு நீதிமன்றமே அனுமதி வழங்கியுள்ள நிலையில் தாம் தமது உறவுகளுக்கு தமது வீட்டில் நினைவேந்தலை செய்ய உள்ளதாக வீட்டார் இராணுவத்திற்கு தெரிவித்த போதிலும், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த சிவப்பு-மஞ்சள் கொடிகளை அகற்ற வைத்துள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.

எவரும் ஒன்று கூடி நினைவேந்தலை முன்னெடுக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்ட நிலையில் மேலதிக இராணுவத்தினர் திரும்பிச் சென்றிருந்த போதிலும் அங்கு தொடர்ந்து இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

குறித்த வீட்டாரின் மூன்று பேர் மாவீரர்களாகிய நிலையில் அவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு கார்த்திகை பூ கோலம் போடப்பட்டு நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50