(இராஜதுரை ஹஷான்)
மக்களுக்கு குறுகிய கால பயனை வழங்கும் நோக்கில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்படவில்லை.
ஆட்சி மாற்றத்தின் பலனை மக்கள் நிரந்தரமாக பெற வேண்டும் . என்பதை கருத்திற் கொண்டு வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி பிரதான அமைச்சுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கிராமிய வயல்கள் சார்ந்த குளங்கள் மற்றும் நீர்தேக்கங்கள் ,நிர்மாண அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவது 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் பிரதான இலக்குகளுக்கு உள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அதிக நிதி இம்முறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
விவசாயத்துறை மற்றும் நீர்பாசன அபிவிருத்திக்கு எக்காலத்திலும் இல்லாத வகையில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்தில் அமையவில்லை என எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
வரவு - செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு குறுகிய கால நலனை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல.
ஆட்சி மாற்றத்தின் பலனை மக்கள் நிரந்தரமாக பெற வேண்டும். என்ற தூர நோக்க கொள்கை அடிப்படையில் வரவு - செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடவில்லை. நீதித்துறை தற்போது சுயாதீனமாகவே செயற்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM