மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (27.11.2020) வணிக நிலையங்கள் அனைத்தும் பூட்டபட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது.
இந்நிலையில் பூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களை அச்சுறுத்தல் மூலம் பலவந்தமாக திறக்கவைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருவதாக வணிகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு நகரில் பெருமளவிலான ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் பூட்டியிருக்கும் கடைகளின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு கடைகளை திறக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கடைகளை நீங்கள் ஒருநாள் பூட்டலாம் ஆனால் 365 நாட்களுக்கும் இராணுவமே உங்களுக்கு பாதுகாப்பு என தெரிவித்துள்ளனர்.
மேலும் புதுக்குடியிருப்பு வணிகர் கழக தலைவரை அழைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்கள் வணிகர்கழகம் அறிவித்தா கடைகள் பூட்டப்பட்டுள்ளன ? என விசாரித்துள்ளதுடன் தலைவரையும் அழைத்து சென்று பூட்டப்பட்ட கடை உரிமையாளர்களிடம் நேரடியாக விசாரணை செய்துள்ளார்கள்.
வணிகர்கள் தங்கள் விருப்பின் பெயரில்தான் கடைகளை பூட்டியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் நேரடியாக பூட்டப்பட்டுள்ள வணிக நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்ட புதுக்குடியிருப்பு பொலிசார் கடையினை உடனடியாக திறக்குமாறும் இல்லாது பொலிஸ் நிலையம் அழைத்து முறைப்பாடு பதிவுசெய்யப்படும் என அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டியிருக்கும் கடைகளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சுயவிருப்பின் பெயரில் கடைகளை பூட்டிய உரிமையாளர்களுக்கு தனிமனித சுதந்திரம்கூட இல்லாத நிலை காணப்படுகின்றதாக வர்த்தகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM