யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் க. நடராஜா அறிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பதிவாளர் திணைக்கள அலுவலக ஊழியர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று முழுநாளும் செயற்பட்டதன் காரணமாக இன்றிலிருந்து பொது மக்களுக்கான சேவை வழமை போல் இடம்பெறும் என தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகமானது கடும் மழையின் தாக்கத்தினால் நான்கு மாடிகளைக்கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது.
வெள்ளம் உட்புகுந்த குறித்த அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு குறித்து அலுவலகத்தினை பார்வையிட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM