(செ.தேன்மொழி)
வீதி விபத்துக்களின் குற்றவாளியாக தாம் பெயர் பெறக்கூடாது என்ற எண்ணத்திலேயே சாரதிகள் ,பயணிகள் மற்றும் பாதசாரதிகள் எப்போதும் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டிருந்ததனால், வீதி விபத்துகள் ஓரளவு குறைவடைந்திருந்தன. எனினும் தற்போது இந்த விபத்துகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.அதற்கமைய இன்று இடம் பெற்ற இரு வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ,மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.
பெரும்பாலான வாகன விபத்துகள் சாரதி மற்றும் பாதசாரதிகளின் கவனக்குறைவின் காரணமாகவே இடம்பெறுகின்றன. இதனால் எப்போதும் தாம் வாகன விபத்துகளுக்கு காரணமாக இருக்க கூடாது என்ற எண்ணத்திலேயே வாகன சாரதிகள்,பயணிகள் மற்றும் பாதசாரதிகள் செயற்பட வேண்டும்.
வருடத்திற்கு வாகனவிபத்துகளால் எமது நாட்டில் 3000 பேர் வரை உயிரிழப்பதுடன்,20 ஆயிரம் பேர் வரையில் காயமடைவர். இதனால் இவ்வாறான உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக நாம் எப்போதும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். மழைக் காலங்களின் போதும் மிகுந்த கவனத்துடன் வாகனத்தை செலுத்த வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM