(க.பிரசன்னா)
தொற்றா நோய்களின் சிகிச்சைக்கான மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதற்கு அரச ஒசுல மருந்தகங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்குமென அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாம் இந்த சூழ்நிலையில் பொது மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இணையத்தளம், தொலைபேசி மூலமாக இலக்கங்களை வெளியிட்டு வருகின்றோம்.
இந்த தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மருந்து பட்டியலை வட்ஸ்அப், வைபர் மூலமாக அனுப்பி வைத்தால் நாம் தேவையான மருந்துகளை ஒசுசல மருந்தகத்தில் தயார் செய்து உங்களுக்கு கிடைக்கக்கூடியதாக நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
தற்பொழுது அரச வைத்தியசாலைகளில் தொற்றா நோய்க்கிளினிக் சிகிச்சைக்கான மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருந்து வகைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்க்கொள்வோருக்கு வசதியாக அரச ஒசுசல மருந்தகங்கள் 24 மணித்தியாலமும்; செயற்படுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசேடமாக கம்பஹா, கொழும்பு போன்ற பிரதேசங்களில் தற்போது சேவைகளை முன்னெடுத்துள்ளோம். இருப்பினும், இதில் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை. எமது மருந்தக கூட்டுத்தாபன இணையத்தளத்தில் தொலைபேசி இலக்கங்கள் உண்டு.
நீங்கள் தொற்றாநோய்க்கு உள்ளானவர்கள் என்றால் அதற்கான மருந்துகளை பயன்படுத்தாமல் இருக்க வேண்டாம்.
கொரோனா தொற்றினால் உங்களுக்கு ஆபத்து ஏற்படுவதையும் பார்க்க தொற்றா நோய்க்கு மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் சார்பாக இந்த கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
மேலதிக விபரங்களுக்கு அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் இணையத்தளமான www.spc.lk பார்வையிட முடியுமென்பதுடன் 0112320356-9 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் 0112447118 என்ற தொலைநகலுடனும் இணைந்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM