வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான OCI அட்டைகளை புதுப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான OCI அட்டைகளை 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை புதிபிக்கமுடியும் என உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டைகளை புதுப்பிப்பதற்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2021 ஜூன் 30 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும். தற்போது அமுலில் இருக்கும் விதிகளுக்கு அமைவாக OCI அட்டைகளை வைத்திருப்பவர்களில் முகத்தில் ஏற்படும் வளர்ச்சி மாற்றங்கள் காரணமாக, 20 வயதுக்கு குறைவானவர்கள் தமது கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்கும்போதும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு தடவையும் தமது OCI அட்டைகளையும் புதுப்பிக்க வேண்டிய தேவை உள்ளது.
இருந்தபோதிலும் OCI அட்டை வைத்திருப்பவர்கள் ஏற்கனவே உள்ள OCI விதிகளுடன் இணங்கிச் செல்லுமாறும் விதிமுறைகளுக்கு ஏற்ப OCI அட்டைகளைப் புதுப்பிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM