கடந்த மாதம் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் கைவிடப்பட்ட புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
ஒக்டோபர் 2 ஆம் திகதி அன்று புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை ஹமத் சர்வதேச விமான நிலையத்தின் குளியலறையில் கைவிடப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனடியாக மருத்துவ கவனிப்பும் வழங்கப்பட்டது.
விமான நிலைய பணியாளர் ஒருவர் தேவை நிமித்தம் அங்கு சென்ற வேளையில் சிசுவைக் கண்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தையின் தாய் பற்றி அறிந்து கொள்ள அன்றைய தினம் பல பெண்களிடம் திடீர் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு அவுஸ்திரேலியப் பெண்கள் 13 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையினால் கட்டாருக்கும், அவுஸ்திரேலியாவுக்கும்மிடையில் சிறு விரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கைவிடப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது.
ஆசிய நாட்டைச் சேர்ந்த அந்தத் தாயாரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்தள்ளது.
அந்தத் தாயார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே சமயத்தில் முழு உடல் சோதனைக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஆனால் அவர்கள் மீது எத்தகைய குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவத்தின் விளைவாக ஏற்பட்ட "எந்தவொரு பயணியின் தனிப்பட்ட சுதந்திரத்தில் ஏதேனும் துன்பம் அல்லது மீறல்களுக்கு" மன்னிப்பு கேட்டு கட்டார் அரசு அக்டோபர் 28 ஆம் திகதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM