ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டது

Published By: Vishnu

25 Nov, 2020 | 02:03 PM
image

7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் புத்தளம், ஆராச்சிகட்டுவ பொலிஸ் நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை 7 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் காஸ்டபள் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் காஸ்டபள் ஒருவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்விருவரும் சிலாபம் மெதவத்த பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் தொடர்பிலிருந்துள்ளதை அடுத்தே, அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

இவ்வாறு சுயதனிமைப்படுத்தலில் இருந்த பொலிஸ் காஸ்டபள் ஒருவருக்கே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருடன் தொடர்பை பேணிய ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் நல்லதரண்கட்டுவ பொது மண்டபத்தில் இடம்பெறும் எனவும் சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தேவப்பெருமாளுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 02:50:20
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44