புத்தளம், பாலாவி பகுதியில் மஞ்சளை கடத்துவதற்கு தயாராகிக்கொண்டிருந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த இருவரும் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருடன் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து புத்தளம் அனுராதபுர வீதியில் அமைந்திருக்கும் அரிசி ஆலையொன்றில் மேற்கொண்ட தேடுதலில், கெப் ரக வாகனத்தில் கொண்டு செல்ல தயாராகவிருந்த 8 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 231 கிலோ உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டது.
இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் கற்பிட்டி பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
இதன்போது கைதுசெய்யப்பட்ட இருவரும் புத்தளம், மற்றும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மஞ்சளுடன் இரு சந்தேக நபர்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM