21 ஆயிரத்தை நெருங்கும் இலங்கையின் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை

Published By: Vishnu

25 Nov, 2020 | 06:55 AM
image

நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 459 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 20,967 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 459 கொரோனா நோயாளர்களுள் 458 பேர் பேலியகொட - மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கியவர்கள் ஆவர்.

ஏனைய ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த துருக்கிய ஏயர்லைன்ஸ் விமான உதவியாளர் ஆவார்.

இதேவேளை நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 465 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதனால் குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையும் 14,962 ஆக உயர்வடைந்தது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 56 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 5,911 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 601 நபர்கள் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக நேற்றிரவு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் உறுதிசெய்யப்பட்டது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 94 ஆக பதிவானது.

01. கினிகத்தேன பிரதேசத்தைச்சேர்ந்த 74 வயதான ஆண் நபர் ஆவார். சிறைச்சாலை தை;தியசாலையிலிருந்து ராகம போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 22ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19 வைரஸ் தொற்றுடன் வயிற்றுப்போக்கு காரணமாக ஏற்பட்ட பல உறுப்பு செயலிழப்பு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. சியம்பலாபே தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீண்டநாள் நீரிழிவு நோயுடன் கொவிட் 19 தொற்றக்குள்ளானதினால் நோய் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. கொழும்பு 15 பிரதேசத்தைச்சேர்ந்த 73 வயதான பெண். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் அழற்சி மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. பண்டாரகம அட்டுலுகமை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான ஆண் நபர். பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அத்துடன் அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நாள்பட்ட கல்லீரல் நோய் மூளையை பாதித்தமை மற்றும் வீக்கம் ஏற்பட்டமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41