ஜனாதிபதி கோத்தபாயவுக்கு யாழ். நீதிவான் பிறப்பித்த அழைப்பாணையை இரத்து செய்தது மேன் முறையீட்டு நீதிமன்றம்

Published By: Vishnu

24 Nov, 2020 | 09:00 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோரை கடந்த 2011 ஆம் ஆண்டு கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய விவகாரம் தொடர்பில், யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும் ஆட்கொணர்வு மனு விசாரணைகளில் சாட்சி வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்தது.

மேன் முறையீட்டு நீதிமன்றின்  தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித்த ராஜகருணா ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இந்த தீர்ப்பை வழங்கியது.

பாதுகாப்பு காரணங்களால் காரணமாக தன்னால் யாழ்ப்பாணத்துக்கு செல்ல முடியாது எனவும், அழைப்பாணையை இரத்து செய்யவும் கோரி, கோத்தாபய ராஜபக்ஷ சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனு மீதான விசாரணையின்போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில்,  ஹபயாஸ் கோப்பர்ஸ் என அறியப்படும் ஆட்கொணர்வு மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  அது குறித்த சாட்சி விசாரணைகள் யாழ். நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27  ஆம் திகதி, குறித்த விவகாரத்தில் சாட்சியமளிக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21