(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
அரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார். 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சிலரது கைகளில் நீதிமன்ற அதிகாரம் சென்றுவிட்டது எனவே இந்த அரசாங்கத்திடம் "சாது சாது" என்றே கூற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,
அப்பாவி மக்களின் வழக்குகளை விசாரிக்க முடியாத விதத்தில் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளது, ஆனால் வி.ஐ.பி களின் வழக்குகள் விசாரிக்கப்பட்டு அவர்கள் விடுதலையாகிக்கொண்டுள்ளனர். குற்றவாளிகள் என சிறையில் இருந்த பலர் அண்மைக்காலமாக விடுதலையாகுவதை பார்க்க முடிகின்றது.
இன்று பிள்ளையான் விடுதலையாகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது. எனவே வி.ஐ.பிகளுக்கான நீதிமன்றம் திறக்கப்பட்டு விடுதலையாகிக்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் காட்டு சட்டம் என்ன என்பதற்கு பிள்ளையானின் விடுதலை போதுமானது,
தலதா மாளிகைக்கு குண்டு வைத்தவர்கள், அரந்தலாவையில் பெளத்த பிக்குகளை கொன்றவர்கள் இன்று விடுதலையாகி வருகின்றனர். எனவே இந்த அரசாங்கத்திடம் "சாது சாது" என்றே கூற வேண்டும்.
தேரர்களின் தோளில் ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பெளத்தர்களுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துவிட்டது. நாட்டில் காட்டு சட்டங்களும் காட்டு நீதிமன்றங்களும் இயங்கிக்கொண்டுள்ளது. 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒரு சிலரது கைகளில் நீதிமன்ற அதிகாரம் சென்றுவிட்டது என்பதற்கு இதுவே நல்ல உதாரணமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM