பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள சேரி பகுதியில் குடிசைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக கிட்டத்தட்ட 100 பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
தீயை அணைக்க மொத்தம் 12 தீயணைப்பு பிரிவுகள் பல மணி நேரம் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
டாக்காவின் மொஹகாலி பகுதியில் சாட் டோலா என்று அழைக்கப்படும் சேரி, மக்கள் தொகை கொண்ட குடியிருப்பு பகுதியாகும்.
இங்கு ஆயிரக்கணக்கான ஏழை குடியிருப்பாளர்கள் வசிக்கின்றனர்.
குறித்த தீ விபத்தில் இதுவரை எவரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான சரியான காரணத்தை தீயணைப்பு வீரர்கள் இன்னும் கண்டறியவில்லை.
அந்நாட்டு நேரப்படி, திங்கள் இரவு 11:45 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அது விரைவில் பல குடிசைகளுக்கு பரவி தீக்கிரையாக்கியுள்ளது.
"தகரம், பிளாஸ்டிக் மற்றும் அட்டை பெட்டிகள் ஆகியவற்றால் நிர்மாணிக்கப்பட்ட 98 குடிசைகள் 98 தீயில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிவடைந்துள்ளன.
தலைநகர் டாக்காவில், ஒவ்வொரு ஆண்டும் தீ விபத்துக்களால் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக நிர்க்கதிக்குள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM