(நா.தனுஜா)
கொவிட் - 19 வைரஸ் தடுப்புமருந்தைக் கொள்வனவு செய்வதற்காக எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தில் பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்படவில்லை. இதுவிடயத்தில் அரசாங்கம் முறையான திட்டமிடலின்றி செயற்படுகின்றதா? அல்லது இதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் உணரவில்லையா? என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கரு ஜயசூரிய
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் கொவிட் - 19 வைரஸ் தடுப்புமருந்தைக் கொள்வனவு செய்வதற்கு வரவு - செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதுவிடயத்தில் அரசாங்கம் முறையான திட்டமிடலின்றி செயற்படுகின்றதா? அல்லது இதன் முக்கியத்துவத்தை உணரவில்லையா? எதுஎவ்வாறெனினும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கான உரிமை இலங்கை மக்களுக்கு இருக்கிறது என்பதுடன் நாட்டுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதேவேளை தற்போது கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், புதிதாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை சீரான கோட்டில் பயணிக்கிறது. இந்நிலையில் நாட்டின் சுகாதாரத்துறையினால் கையாள முடியாதளவிற்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.
எனினும் கொவிட் - 19 வைரஸ் தடுப்புமருந்தை அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கையிலேயே இதன் நீண்டகால வெற்றி தங்கியிருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM