(எம்.மனோசித்ரா)
நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு சீரான கோட்டில் சென்று கொண்டிருக்கிறது. எனினும் நாடு முழுமையாக சுமூகமான நிலையை அடைந்துள்ளது என்று உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்த சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து உறுதியாகக் கூற முடியும் எனவும் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். எனினும் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறித்தவொரு சமநிலையை அடையக் கூடியளவில் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அதனை தற்போது உறுதியாகக் கூற முடியாது.
மாறாக எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து உறுதியாகக் கூற முடியும். நாளொன்றுக்கு இனங்காணப்படும் தொற்றாளர்களில் பெருமளவானோர் மேல் மாகாணத்திலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுமே இனங்காணப்படுகின்றனர்.
இது வரையில் 6,703 படுக்கைகளில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,428 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை 15 தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள 147 படுக்கைகளில் 5 படுக்கைகளில் மாத்திரமே தொற்றாளர்கள் உள்ளனர். கடந்த 24 மணித்தியாலளங்களில் சுமார் 10,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏனைய பிரதேசங்களில் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்படுகின்றனர். எனவே எதிர்வரும் நாட்களில் அதிகளவான பரிசோதனைகளை முன்னெடுத்து தொற்றாளர்களை துரிதமாக இனங்காண்பதே எமது இலக்காகும்.
அதற்கமைய முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படக் கூடிய நிலை ஏற்படும். நாம் எதிர்பார்த்ததைப் போன்று சிறு சிறு கொத்தணிகள் உருவாகின்றன. எனவே தான் தினமும் சுமார் 400 என தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
எனினும் முன்னர் இனங்காணப்பட்டதைப் போன்றே ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படும் அபாயம் குறைவடைந்துள்ளது. அதற்காக நாம் எமது செயற்பாடுகளை நிறுத்தவில்லை. எனவே எதிர்வரும் நாட்களில் நிலைமை சுமூகமாகும்.
ஊரடங்கு அற்ற அல்லது ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர். எனினும் பல்வேறு விடயங்களையும் கவனத்தில் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் குறித்து தீர்மானிக்கப்படுகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM