(க.பிரசன்னா)
வரவு - செலவுத்திட்டத்தில் அறிவித்தபடி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் 1000 ரூபா சம்பளவுயர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் இல்லையெனில் ஜனவரி மாதத்துக்குப்பின்னர் 1500 ரூபாவை கோரி புதிய சம்பள போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவர் சமன் குமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறி ஒரு வருடம் கடந்த நிலையிலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்திலும் அதன்பின்னர் அமைச்சராகவிருந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் என பலரும் 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்கவில்லை.
இவ்வாறு கடந்த நான்கரை வருடங்களாக மலையக மக்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு வருகின்றது. இம்முறையாவது அதனை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
இவ்விடயத்தில் சகலரும் ஒத்துழைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தட்டிக்கழிப்புச் செய்து விட வேண்டாம்.
எனவே வீரவசனம் பேசி போலி அறிக்கைகளை விடாமல், இம்முறை தை மாதத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அனைவரும் முயற்சிக்க வேண்டுமெனவும் அவ்வாறில்லையெனில் ஜனவரி மாதத்துக்குப்பின்னர் 1500 ரூபாவை கோரி புதிய சம்பள போராட்டம் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM