ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தலையடுத்து பெலருஸில் அரங்கேறி வரும் தொடர் போராட்டங்களின்போது தலைநகர் மின்ஸ்கில் 200 க்கும் மேற்பட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை ஆயிரக் கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன்போது பொலிஸார் கூட்டங்களை கலைக்க ஸ்டன் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாக பெலரசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுவரை 205 பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உரிமைகள் குழுக்கள் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோவின் எதிர்ப்பாளர்கள், லூகாஷென்கோ தனது 26 ஆண்டுகால அதிகாரத்தை நீட்டிக்க தேர்தலை மோசடி செய்ததாக குற்றம் சாட்டி ஆகஸ்ட் முதல் வழக்கமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் லூகாஷென்கோ தேர்தல் மோசடியை மறுத்து, இராஜினாமா செய்ய மறுத்துவிட்டார்.
இவ்வாறான பின்னணியிலேயே பெலருஸ் முழுவதும் போராட்டங்கள் அரங்கேறி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM