மனைவி வெகுநேரம் கையடக்கதொலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தமையால் ஆத்திரம் அடைந்த கணவன், அவரின் காலை உடைத்துள்ளார்.
கோவை சாய்பாபா, கே.கே.புதூரில் வசிப்பவர் மணிகண்டன். இவர் வாகன சாரதியாக பணிபுரிகிறார். நேற்று காலை, இவரின் மனைவி அன்னபூரணி(29) கையடக்கதொலைபேசியில் யாரிடமோ வெகுநேரமாக பேசிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்ட மணிகண்டன், யாரிடம் வெகுநேரம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அன்னபூரனி, தனது உறவினர் ஒருவருடன் என்று பதில் கூறியுள்ளார். ஆனாலும், சந்தேகம் அடைந்த மணிகண்டன், இதுபற்றி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையின் காரணமாக, மணிகண்டன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து அன்னப்பூரணின் காலில் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. அவரை, மணிகண்டன் கோவை அரசு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று வைத்தியர்கள் வினவியபோது அதற்கு, மணிகண்டன் வீட்டில் நடந்ததை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், வைத்தியவாலை வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த பொலிஸார் மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM