(ரொபட் அன்டனி)
நீரியல் மற்றும் நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனவே நீரியல் மற்றும் நீர்ப்பாசன பிரிவுகள் எப்போதும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனராட்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலளார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதாவது மொறகாகந்த திட்டத்திலிருந்து வடக்கு நீர் செல்லும் விடயம் தொடர்பான நிர்வாகம் வடக்கு மாகாண சபைக்கு வேண்டுமெனவும் மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் மாகாண சபையை மதிப்பதில்லை என்றும் வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் மேலும் இங்கு குறிப்பிடுகையில்
13 ஆவது திருத்தச் சட்டத்தில் நீர்ப்பாசன விடயம் தொடர்பில் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனவே நீரியல் மற்றும் நீர்ப்பாசன பிரிவுகள் எப்போதும் மத்திய அரசாங்கத்திடமே காணப்படும்.
நீரியல் மற்றும் நீர்ப்பாசன விடயங்களில் மாகாண சபைகளுக்கு எவ்விதமான அதிகாரங்களும் வழங்கப்படவில்லை என்பதனை புரிந்துகொள்ளவேண்டும். எனவே அதில் மாகாண சபைகள் தலையிட முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM