கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலொன்றான கொழும்பு - 15 மோதரையின் “மெத்சந்த செவன” தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், தமது பகுதி தொடர்ச்சியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பிரச்சினைகளும் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரசாங்கம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கி வருகிற போதிலும், அத்தொகையைக் கொண்டு ஒரு மாதத்திற்கு மேல் எவ்வாறு வாழ்வது எனவும் குறித்த பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்றைய தினம்(21..11.2020) கொழும்பு - 15 மோதரை - இக்பாவத்த பகுதியை சேர்ந்த மக்கள் வீதிக்கிறங்கி இதோ போன்றதொரு ஆர்ப்பாட்மொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இவ்வாறிருக்கையில், நாட்டில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்கள் பதிவாகி வருகிறது. நேற்றைய தினம் (21.11.2020) மாத்திரம் கொழும்பில் 9 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM