தாய்லாந்தில் நாட்டில் மிகவும் பரபரப்பான வீதியொன்றில் பலர் முன்னிலையில் பாலியல் உறவில் ஈடுபட்ட அயர்லாந்தைச் சேர்ந்த 24 வயதான சுலீவன் எனும் இளைஞனும் அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயதான நதீன் எனும் யுவதியும் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளனர்.
சுலீவன் தாய்லாந்திற்கு சுற்றூலா வந்தவரும் , நதீன் பரிமாற்று முறையில் தாய்லாந்தில் கல்வி கற்க வந்த மாணவி எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்விருவரும் கடந்த 18 ஆம் திகதி தாய்லாந்தின் கோஹ் பி பி எனும் தீவில் விருந்தொன்றில் கலந்து கொண்டபின் ஹோட்டல் ஒன்றுக்கு வெளியே வீதியொன்றில் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த ஜோடியினரின் நடவடிக்கைக்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த ஜோடியினர் பாலியல் உறவில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்ட படங்களையும் பலர் இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.
இதையடுத்து இவ்விருவரையும் கைது செய்த தாய்லாந்து பொலிஸார் கடந்த ஞாயிறு நடந்த ஊடகவியளாலர் சந்திப்பிற்கு இவர்களை அழைத்து வந்தனர்.
இவ் ஊடகவியளாலர் சந்திப்பின் போது தமது அநாகரிக நடவடிக்கைக்காக தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாக இவ்விருவரும் தெரிவித்தனர்.தாங்கள் அவ்வேளையில் அதிக மதுபோதையில் இருந்ததால் இத்தவறு இடம்பெற்றதாகவும் தெரிவித்தனர். இவர்களுக்கு தாய்லாந்து அதிகாரிகளால் 60 அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM