கொரோனாவை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் எந்த திட்டமும் வரவு செலவு திட்டத்திலில்லை - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

20 Nov, 2020 | 06:25 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கொவிட்-19 பிரச்சினையால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல வரவு செலவு திட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை. என எதிர்க்கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கின்றபோது ஆட்சியாளர்கள் அதற்கு செவிசாய்க்கவேண்டும். அவர்களின் கோரிக்கைகளை முடியுமானவரை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆட்சியாளர்கள் கோபம்கொள்ளக்கூடாது. மக்களின் தேவைகளை, குறைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கே நாட்டுக்கு அரசாங்கம் ஒன்று இருக்கின்றது.

கொவிட் -19 காரணமாக உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. எமது நாட்டில் அதிகமானவர்கள் தொழில் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அன்றாட வாழ்க்கை செலவுக்காக மக்கள்  கஷ்டப்படுகின்றனர். வியாபார நிலையங்கள் நட்டத்தில் இயங்குகின்றன. பினான்ஸ் நிறுவனங்களுக்கு கடன் செலுத்த முடியாமல் பலர் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். ஆனால் அவ்வாறான  எந்த திட்டமும் வரவு செலவு திட்டத்தில் இல்லை. 

இந்த பிரச்சினைகளை வெற்றிகொண்டு முன்னுக்குசெல்ல  சர்வதேச நாடுகள் பல திட்டங்களை மேற்கொண்டுவருகின்றன. ஆனால் நாங்கள் அதிலிருந்து மீண்டு முன்னுக்கு செல்ல எடுக்கும் எந்த முயற்சியும்  காண்பதற்கில்லை.

அதனால் தொடர்ந்தும் நாங்கள் சம்பிரதாய அரசியலில் இருந்து விடுபட்டு, நவீனத்துவத்துக்கு செல்லவேண்டும். பிரிவினைவாத அரசியலில் இருந்து விடுபடவேண்டும். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலும், அவரை சம்பிரதாய, பிரிவினைவாத அரசியல் வட்டத்துக்குள் இருக்கியிருப்பதை காணமுடிந்தது. 

இது மிகவும் துரதிஷ்டவசமாகும். ஏனெனில் பிரிவினைவாத அரசியலால்  மக்களின் கோரிக்கைகள் பிரச்சினைகள் மறைக்கப்படுகின்றன. அதேபோன்று ஏகாதிபத்திய போக்கு மற்றும் பழிவாங்கும் அரசியலில் இருந்து நாங்கள் விடுபட்டு நடக்கவேண்டும். அதன் மூலமே நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியும் என்றார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51