மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு - பிரதி பொலிஸ்மா அதிபர்

Published By: R. Kalaichelvan

20 Nov, 2020 | 05:03 PM
image

(செ.தேன்மொழி)

மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்குமாறு கூறி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுக்களை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த உயிரிழந்த போராளிகளின் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மேன்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளை தடுப்பதற்காக சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் முயற்சித்து வருவதாகவும், எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் அதனை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் குறிப்பட்டே இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மார்தன், பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தரம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டதரணி சஹிரா பாரிக் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், அவர்கள் அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கமைய இது போன்ற தீர்ப்புகளை வழங்குவதால் நீதிமன்றத்தின் அதிகாரம் தொடர்பில் சிக்கல் நிலைமைத் தோற்றம் பெரும் என்று மன்றில் அறிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31