பதுளையில் இதுவரை 37 கொரோனா தொற்றாளர்கள்

Published By: Digital Desk 3

20 Nov, 2020 | 01:58 PM
image

பதுளை நகரில்  நேற்று வியாழக்கிழமை கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் புதன்கிழமை நுகேகொட மீன்சந்தையில் பணிபுரியும், கொழும்பிலிருந்து  பதுளைக்கு வந்த 34 வயதையுடைய நபரே இவ்வாறு கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளவர் என பதுளை  பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து  குறித்த நோயாளியை  உடனடியாக தியதலாவ கஹகல்லை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாக என பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பதுளை மாவட்டத்தில்  கொவவிட் 19 தொற்று தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம  இன்று  மாவட்ட செயலகத்தில் ஊகடங்களுக்கு தெரிவிக்குகையில் பதுளை மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்று 37 நோயாளர்கள் பதிவாகியுள்ளார்,

இவர்களில்  அனேகமானோர் நுகெகொடை மீன் சந்தை மற்றும்  மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலைகளுடன் தொடர்புபட்டவர்களினாலேயே தொற்று ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தில் மஹியாங்கனை பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு நோயாளர்களும், கந்தகெட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும், பதுளையில் இரண்டு நோயாளர்களும் பசறையில்  மூன்று  நோயாளர்களும்,  லுனுகலையில் ஐந்து நோயார்களும்,  வெளிமடையில்  ஒருவரும்,  ஊவபரணகமயில்  ஒருவரும்,  எல்ல பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும், பண்டாரவளையில்  எட்டு நோயாளர்களும்,  ஹப்புத்தலையில் எட்டு நோயாளர்களும், ஹல்துமல்லை பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு தொற்றாளர்களும் மொத்தமாக பதுளை மாவட்டத்தில் 37  கோவிட் 19 தொற்றாளர்கள்  பதிவாகியுள்ளதுடன்  பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களும், சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன்  கட்டுபாட்டுக்குள்  கொண்டு வரப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம  இன்று  மாவட்ட செயலகத்தில் ஊகடங்க சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும்  பதுளை மாவட்டத்தில்  கொரோனா தொற்று தொடர்பில் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம  இன்று தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ்  தொற்றுள்ளவர்களுடன் தொடர்புப்பட்டவர்ளாக 1308 பேர்  சுயத்தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களில் பதுளை பிரதேச செயலாளர் பிரிவில் 141 பேர் சுயத்தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  பண்டாரவளை பிரதேசத்தில் 159 பேரும் எல்ல பிரதேசத்தில் 39 ஹல்துமுல்லை பிரதேசத்தில் 84 பேரும் ஹாலிஎல  பிரதேசத்தில 127 பேரும்  அப்புத்தலையில் 100 பேரும், கந்தகெடிய பிரதேசத்தில் 44 பேரும் லுனுகலை பிரதேசத்தில் 167 பேரும் மஹியாங்கனை பிரதேசத்தில் 80 பேரும் மிகாகிவுல பிரதேசத்தில் 23 பேரும் பசறையில் 46 பேரும் ரிதிமாலியத்த பிரதேசத்தில் 40 பேரும் சொரணாதோட்ட பிரதேசத்தில் 56 பேரும் ஊவாபரணகம பிரதேசத்தில் 55 பேரும்  வெலிமடை பிரதேசத்தில் 147 பேருமாக பதுளை மாவட்டத்தில் 1308 பேர் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவது அனைவரதும் பொறுப்பாகும். பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டு வெளிமாவட்ட வாகனங்கள் வருவதையும் வெளிமாவட்டங்களுக்கு  செல்வதையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அத்தியாவசிய  கருமங்கள் தவிர்ந்த விடயங்களுக்கு  அனுமதி வழங்கப்பட மாவட்டாது எனவும் தெரிவித்தார்.

மேலும்  சுகாதார பிரிவினரின்  உதவியுடன் சுகாதார வழிமுறைகள்  உரிய முறையில் நடைமுறைப்படுத்தபிபடுவதோடு பதுளை மாவட்டத்துக்கு வருகை தருவோரும் செல்வோருக்கும் பதினாங்கு நாட்கள் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தும் செயற்பாடுகள்  சுகாதாரதுறையினரின் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக  செயற்படுத்தப்படுவதோடு  பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில்  கட்டுபாட்டுக்குள்  கொண்டுவருவதற்காக  மாவட்ட கொரோனா தொற்று கட்டுபாட்டு  குழு செயற்படுவதாகவும்  இதனூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை நடைமுறைப்படுத்துவதாகவும்   பொது மக்களின் நாளாந்த  செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு   அரச நிறுவனங்கள்  சுகாதார அமைச்சின்  சுகாதார பரிந்துறைகளை பின்பற்றி   சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தமயந்திபரணகம  தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55