கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிகள் முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.சி உறுதிப்படுத்தியுள்ளது.
அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் கமிட்டியின் பரிந்துரைக்கு அமையவே இந்த திருத்தத்தை மேற்கொள்ள ஐ.சி.சி ஒப்புதலை அளித்துள்ளது.
இந்த வாரம் திங்களன்று தொடங்கிய ஐ.சி.சியின் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு அணி பெற்ற புள்ளிகள் சதவீதத்துக்கு கணக்கிடப்படும் என்றும், அதற்கேற்ப புள்ளி முறைகள் திருத்தப்படும் என்றும் கடந்த வாரம் ESPNcricinfo செய்திச் சேவையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியா 360 புள்ளிகளுடன் முன்னிலை வகித்தது, அவுஸ்திரேலியா 296 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தது.
புதிய முறையின் கீழ் இந்தியாவின் புள்ளிவிபர சதவீதம் 75 ஆகும். இந்தியா நான்கு தொடர்களில் விளையாடிய 480 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் தற்சமயம் உள்ளது.
அதேநேரம் 82.2 சதவீத புள்ளிவிரபங்களை கொண்டுள்ள அவுஸ்திரேலியா மூன்று தொடர்களில் விளையாடிய 360 புள்ளிகள் என கணக்கிடப்பட்டுள்ளதுடன் முன்னிலையில் உள்ளது.
நிறைவடையாத போட்டிகள் சமனிலையில் முடிவடைந்ததாக கருதப்படம் என்று ஐ.சி.சி. விதிமுறைகள் கூறினாலும் கிரிக்கெட் குழு அடுத்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னர் முடிக்கப்படும் போட்டிகள் வரை டெஸ்ட் உலகக் கிண்ண நிலைகளை தீர்மானிக்க முடிவு செய்துள்ளது.
இந்த புதிய விதிமுறை குறித்து ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், “
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது எனக் கருதப்படுகிறது. கொரோனா காரணமாக 85 சதவீத போட்டிகள் மட்டுமே நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக புது விதிமுறையை வகுத்துள்ளோம்.
இந்த விதிமுறைப்படி, நடைபெறாத போட்டிகள் அனைத்தும் சமனிலையில் முடிந்ததாக கருதப்படும். எனினும் அடுத்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னர் முடிக்கப்படும் போட்டிகள் வரை டெஸ்ட் உலகக் கிண்ண நிலைகளை தீர்மானிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் மட்டுமே இறுதிப் போட்டிக்கான அணிகள் தேர்வு செய்யப்படும். இதனால் அதிக புள்ளிகள் பெற்ற அணிகளைவிட, அதிக சதவீதம் பெற்ற அணிகள் முன்னிலை வகிக்கும் என்று கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM