கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய மூவர் மதவாச்சியில் கைது

Published By: Digital Desk 4

20 Nov, 2020 | 01:19 PM
image

கள்ள நோட்டுக்களுடன் தொடர்புடைய  மூவர் மதவாச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து நேற்று (19.11) அவர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து வெளிநாட்டு போலி நாணயதாள்கள் 200, நாணயம் அச்சிடும் இயந்திரம், 100 டொலர் பெறுமதியான அமெரிக்க நாணயதாள்கள் மூன்று மற்றும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மருத்துவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரிடமிருந்து வெவ்வேறு பெயர்களில் தயாரிக்கப்பட்ட ஏழு மருத்துவர்களின் றப்பர் முத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், ஊசி மருந்துகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவித்தனர். 

கள்ளநோட்டுக்களை வவுனியாவில் உள்ள நபர் ஒருவரிடம் கொடுத்து அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கு முயற்சித்த வேளையிலே மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, அனுராதபுரம் மற்றும் மொனராகலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிசார் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58