சஹ்ரானின் மனைவியின் பாதுகாப்பை பலப்படுத்தவும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு கோரிக்கை

20 Nov, 2020 | 02:12 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவின்  பாதுகாப்பை பலடுத்துமாறு  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு,  சிறைச்சாலைகள் ஆணையாளரிடம்  கோரிக்கை விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் வழ்னக்கிய பின்னர் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  குறிப்பிட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

பாத்திமா ஹாதியாவுக்கு கொவிட் 19 தொற்று  ஏற்பட்டுள்ளதால், அவர் வெலிகடை சிறையிலிருந்து வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதன் பின்னனியில் இத்தகைய முறைப்பாடுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது.

 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, சிறைச்சாலைகள் திணைக்களம் முழுமையாக  முயற்சிக்கும் என நம்புவதாக சுட்டிக்காட்டியுள்ள  மனித உரிமைகள் ஆணைக் குழு, ஹாதியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த  உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பொன்றினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும்  அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

 அத்துடன் ஹாதியா தற்போது தடுத்தி வைக்கப்பட்டுள்ள இடம், அவரது பாதுகாப்புக்கு பொறுப்பாக செயற்படும் அதிகாரி உள்ளிட்டோரின் விபரங்களை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அறியத் தருமாறும் அந்த குழு கோரியுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது'

' அடிப்படை உரிமைகள் மீறப்படுவது குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்தல் அது தொடர்பில் விடயங்களை ஆராய்தல்,  சிறைக் கைதிகளின் நலன்கள் தொடர்பில் மேற்பார்வைச் செய்தல்,  மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்தல் உள்ளிட்ட  சுதந்திரம் இல்லாமல் ஆக்கப்பட்ட கைதிகளின்  உரிமைகள் தொடர்பில்  உறுதிசெய்ய 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் 10(ஆ), 11(ஈ) மற்றும் 28 (2) அத்தியாயங்கள் ஊடாக ஆணைக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது.

அதன்படி இந்த கடிதமானது 1996 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க  இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு வழங்க்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அனுப்பப்பட்டுள்ளது.' என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47