ஏப்ரல் தாக்குதல் குண்டுதாரிகளை கைது செய்யும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை: லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: J.G.Stephan

19 Nov, 2020 | 06:30 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

ஏப்ரல் தாக்குதல் மற்றும் பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் ஒருவருடம் கடந்தும் இவை தொடர்பில் யாரையும் கைது செய்யவில்லை. அந்த தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி இவை இரண்டையும் காட்டியே  தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் மத்திய வங்கி பிணைமுறியுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் இவர்கள் வழக்கு தொடுக்கவில்லை. 

அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம், இவர்களின் பிரதான தேர்தல் பிரசாரமாக இருந்தது. ஆனால் இன்று என்ன நடக்கின்றது. ஒருவருடமாகியும் யாரையாவது கைது செய்தார்களா?  இது தொடர் நாடகம்போன்றது. விசாரணைக்காக  முன்னாள் ஜனாதிபதி வருகின்றார். பின்னர் பொலிஸ்மா அதிபர் வருகின்றார். அதன் பின்னர் முன்னாள் பிரதமர் வருகின்றார். ஆனால் குண்டை வைத்தவர்களை கண்டுபிடித்தீர்களா என்றே கர்த்தினால் கேட்கின்றார்.

குண்டுதாரிகளை இவர்களால் கண்டுடிக்கமுடியாது. அந்த தேவையும் இவர்களுக்கு இல்லை. ஏனெனில் உயிர்த்த ஞாயிரு தாக்குதல் காரணமாகவே இவர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். தாக்குதல் இடம்பெற்று ஒருவாரத்துக்குள் கட்டுவாப்பிடியவுக்கு சென்று, நாட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால் நான் போட்டியிடுகின்றேன் என தெரிவித்தே அதிகாரத்துக்கு வந்தார்கள். ஆனால் இதுவரையும் யாரையும் கைது செய்யவில்லை.

மேலும், வரவு செலவு திட்டத்தில் மக்கள் எதிர்பார்ப்பது நிவாரணமாகும். ஆனால் எந்த நிவாரணமும் மக்களுக்கு இல்லை. அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்ததுடன் வரிகுறைப்பை மேற்கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவளித்த கம்பனிகளுக்கு லாபம் பெற்றுகொடுத்தது. அதனால் அரசாங்கத்தின் வருமானம் 600மில்லியன் ரூபா இல்லாமல்போனது. அதனால்தான் வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாமல்போனது. வரிகுறைப்பினாலும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவி்லலை.

அத்தோடு, தற்போதும் அரசாங்கத்திடம் வெளிநாட்டு கையிருப்பு இல்லை. அதனால்தான் தேசிய பொருளாதாரம் தொடர்பில் கதைக்கின்றனர். அரசின் வருமானத்தை 400பில்லியனால் இல்லாமலாக்கிக்கொண்டார்கள். அதனால் தற்போது வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது. பொருட்களை கொண்டுவர முடியாது. 70/78 காலம்போன்று மீண்டும் பொருட்களை வரிசையில் இருந்து பெற்றுக்கொள்ளும் யுகத்துக்கே செல்ல முயற்சிக்கின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58