அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சத்யா நாதெல்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன், நேற்று அவர் காணொளி ஊடாக உரையாடினார்.
இதன்போது, புதிய அரசின் பொருளாதாரக் கொள்கை குறித்து கருத்து வெளியிட்ட ஜோ பைடன்,
ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்பட்ட கொரோனா நிவாரண சட்டம் போன்று, மீண்டும் ஒரு பொருளாதார ஊக்குவிப்பு சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.
முதலீடு, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு மின் வாகன தயாரிப்பு துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் ஜோ பைடன் குறிப்பிட்டார்.
மின் வாகனங்களுக்கு, நாடு முழுதும், 5 இலட்சம், சக்தியற்ற மையங்கள் அமைக்கப்படும். இதன் மூலம், நல்ல சம்பளத்துடன், 10 இலட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். பசுமை எரிசக்தி தொடர்பான ஆய்விற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன கூறினார்.
வாகனம், பொறியியல் சாதனங்கள் தயாரிப்பு துறைகளில் வருங்கால தேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வாயிலாக, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM