முல்லைத்தீவில் வீதியோர மரங்களை அகற்றும் பணியில் அரச மரக்கூட்டுத்தாபனம் 

Published By: Digital Desk 4

19 Nov, 2020 | 11:24 AM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் வீதியோரங்களில் காணப்படுகின்ற அபாயகரமான மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

குறிப்பாக அண்மை நாட்களாக கனமழை பொழிவதோடு காற்று வீசுகின்றமையால் மரங்கள் முறிந்து விழுந்து வீதியால் பயணிக்கின்றவர்கள் காயமடைகின்ற சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக இரண்டரை மாதங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு வீதி ஓரத்தில் இருந்த மரமொன்று கடும் காற்று மற்றும் மழை காரணமாக சரிந்து விழுந்ததில் வீதியால் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்ததாகவும்  எனவே வீதியோரத்தில் இருக்கும் அபாயகரமான  மரங்களை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து வீதிகளின் ஓரங்களிலும் இவ்வாறான மரங்கள் காணப்படுகின்றதாகவும் அவற்றை அகற்றுமாறும் அதேவேளையில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19 ஆவது கிலோமீட்டருக்கும் இருபதாவது கிலோ மீட்டருக்கும் இடையில்  மிக ஆபத்தான நிலையில் இருக்கின்ற குறித்த மரத்தையும் மிக விரைவில் அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் .

ஊடகங்களில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னணியில் முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் 19ஆவது கிலோமீட்டருக்கும் இருபதாவது கிலோ மீட்டருக்கும் இடையில்  மிக ஆபத்தான நிலையில் இருந்த மரத்தினை அரச மரக்கூட்டுத்தாபனத்தினர் இன்று காலை அகற்றியதோடு ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் காணப்படும் இவ்வாறான மரங்களை அகற்றும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பணியினை விரைந்து மேற்கொண்ட அதிகாரிகளுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்  இதேபோன்று ஏனைய வீதிகளிலும் உள்ள ஆபத்தான மரங்களையும் அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11