புறக்கோட்டை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவனளப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதானவரென பொலிஸார் தெவித்தனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 3 கிலோ 180 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபர் வவுனியாவிலிருந்து மவுன்ட் லாவன்யா பகுதிக்கு குறித்த கேரள கஞ்சாவினை கடத்த முற்பட்டமை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதுடன், அவரை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM