தனது மனைவியை தீ வைத்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை 

Published By: Digital Desk 4

18 Nov, 2020 | 02:59 PM
image

திருகோணமலையில் காதலர் தினத்தன்று தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து  தீர்ப்பளிக்கப்பட்டது.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (18) இத்தீர்ப்பினை வழங்கினார்.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் திருகோணமலை-இல 38/1 பாடசாலை வீதி, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஹெந்த ஹேவகே அனுர இஷாந்த (38வயது) என தெரியவருகின்றது.

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினத்தன்று கந்தளாய்-அக்போபுர பகுதியில்  மனைவியின் கையடக்கத் தொலைபேசியில் உடம்பில் ஆடையின்றி வீடியோ இணைப்பில் பேசிக்கொண்டிருந்தபோது  தான் குறுக்கே வந்ததால் என் மனைவி தனக்குதானே தீ வைத்துக் கொண்டதாகவும் குற்றவாளியின் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்த குற்றத்திற்காக 2019ம் ஆண்டு 04ம் மாதம் 12ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த எதிரிக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பகர்வு  பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவர் தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் ஏற்படுத்தியமை இலங்கை தண்டனை சட்டக்கோவை 296 பிரிவின்கீழ் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 குறித்த குற்றவாளிக்கு சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திறந்த நீதிமன்றில் தமது  தீர்ப்பினை வாசித்துக் காட்டினார் இந்நிலையில் குறித்த குற்றவாளி தனது மனைவியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மரணம் விளைவித்தமை தொடர்பில் இவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32