(க.பிரசன்னா)
ஐந்து விசேட விமானங்களின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் செயற்பாட்டின் முதல் கட்டமாக இன்று புதன்கிழமை 280 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து குறித்த 280 இலங்கையர்களும் அழைத்து வரப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட அனுமதியின் பேரில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை ஐந்து விமானங்களின் மூலம் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் இன்று முதலாவது விமானம் இலங்கைக்கு வருகைத்தந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை இத்தாலியிலிருந்து 100 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அத்துடன், 297 இலங்கையர்கள் நவம்பர் 21 ஆம் திகதி கட்டாரிலிருந்து அழைத்துவரப்படவுள்ளதுடன் மேலும் 297 இலங்கையர்கள் நவம்பர் 23 ஆம் திகதி குவைத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட உள்ளனர். நவம்பர் 26 ஆம் திகதி 290 இலங்கையர்கள் ஓமானில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் வெளிநாட்டு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் விசேட அனுமதியின் அடிப்படையில் துபாயில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM