நியூஸிலாந்து காவல் துறையில் முஸ்லிம் பெண்களை இணைத்துக் கொள்ளும் ஊக்குவிப்பு நடவடிக்கையாக நியூஸிலாந்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ சீருடையில் ஹிஜாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புதிதாக ஆட்சேர்க்கப்பட்ட கான்ஷ்டபிள் ஜீனா அலி அதிகாரப்பூர்வமாக ஹிஜாப்பை அணிந்த முதல் நியூஸிலாந்து பெண் பொலிஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார்.
முன்னதாக லண்டனில் உள்ள பெருநகர காவல்துறை மற்றும் ஸ்கொட்லாந்து பொலிஸ் போன்ற பிற படைகள் ஒரு சீரான ஹிஜாப் அணிவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அது மாத்திரமன்றி அவுஸ்திரேலியாவின், விக்டோரியா காவல்துறையின் மகா சுக்கர் என்ற பெண் பொலிஸ் அதிகாரி 2004 இல் ஹிஜாப் அணிந்திருந்தார்.
இவ்வாறான பின்னணியிலேயே நியூஸிலாந்து காவல்துறையில் ஹிஜாப் அணிவதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுளளது.
இடைநிலைப் பள்ளிகளுக்குச் சென்ற பெண் காவல்துறை ஊழியர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஹிஜாப்பை அதன் சீருடையில் உள்வாங்குவதற்கான பணிகள் தொடங்கியதாக நியூசிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந் நிலையில் நியூஸிலாந்தில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை கான்ஷ்டபிள் ஜீனா அலி பெற்றுள்ளார்.
பிஜியில் பிறந்து குழந்தையாக நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்த அலி, நியூசிலாந்து ஹெரால்டிடம், கிறிஸ்ட்சர்ச் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு காவல்துறையில் சேர முடிவு செய்ததாக கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM