பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல்-ஹசனுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஷகிப் அல்-ஹசன் நவம்பர் 12 ஆம் திகதி இந்தியாவின், கொல்கத்தாவுக்கு சென்று காளிபூஜையில் கலந்து கொண்டு அவ் விழவை தொடங்கி வைத்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்ப்பினை வெளியிட்ட பங்களாதேஷைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், தனது பேஸ்புக் பக்கத்தில் கையில் பெரிய கத்தியுடன் ஷகிப் அல்-ஹசனுக்கு பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுத்தார்.
இந் நிலையில் தற்போது அவரை கைதுசெய்துள்ளதாக டாக்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அளித்த ஷகிப் அல்-ஹசன்,
‘காளி பூஜையை தொடங்கி வைக்க நான் கொல்கத்தா செல்லவில்லை. கொல்கத்தா மேயர் தான் அதை தொடங்கி வைத்தார். அழைப்பிதழை பார்த்தால் நான் சிறப்பு அழைப்பாளர் கூட கிடையாது என்பது புரியும்.
அதன் அருகில் நடந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு காரில் திரும்பும் போது மக்கள் கூட்டத்தால் சில நிமிடங்கள் நிறுத்த வேண்டியதானது. அப்போது பூஜையில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். எனது செயல் தவறு என்பதை இப்போது உணர்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM