கொரோனா பரவல் காரணமாக இரு மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கித் தவித்த 88 இலங்கையர்கள் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு தொழில்வாய்ப்புக்காக சென்ற 29 இலங்கையர்கள் அபுதாபியிலிருந்து எட்டிஹாட் ஏயர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான EY-264 என்ற விமானத்தில் அதிகாலை 12.40 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும், கட்டாரிலிருந்து 37 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் அதிகாலை 1.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அதேபோன்று கட்டாரிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -218 என்ற விமானத்தில் மேலும் 22 இலங்கையர்களும் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
நாட்டை வந்தடைந்த அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்துடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM