மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஐஸ் போதை பொருள் விற்பனையாளர்கள் இருவர் சனிக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும் புதிய காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் எனவும் காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர்.
இவர்களிடமிருந்து தலா 6கிராமும் 400 மில்லிகிராமும், 105 கிராமும் 300 மில்லி கிராமும் ஐஸ் போதை வஸ்த்து மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு கையடக்க தொலைபேசி, ஒரு டெப் என்பவற்றையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
பொலிஸ் அத்தியட்சகர், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று 14.11.2020 சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது எதிர்வரும் 27.11.2020 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்திரவிட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தெடர்பில் காத்தான்குடி பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM