சீனா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து இலங்கை தூதரக அதிகாரிகள் உட்பட மொத்தம் 128 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி சீனாவின் ஷாங்காயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -867 என்ற விமானத்தில் ஐந்து இலங்கையர்கள் நேற்று மாலை 6.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-648 என்ற விமானத்தில் 59 இலங்கையர்கள் நேற்றிரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அத்துடன் கடடார், தோஹாவிலிருந்து கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் 39 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை இலங்கை தூதரக அதிகாரிகளும் துபாயிலிருந்து எமிரேட்ஸிலிருந்தும், கட்டாரிலிருந்தும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இது தவிர துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யுஎல் -226 என்ற விமானத்தில் 25 இலங்கையர்களும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் கொழும்பில் அமைந்துள்ள நவலோக மற்றும் லங்கா தனியார் வைத்தியசாலைகளின் ஊழியர்களால் பி.சி.ஆர்.சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக நீர்கொழும்பு பகுதியில் அமைந்துள்ள பல சுற்றலா ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், தூதரக அதிகாரிகள் சுய தனிமைப்படுத்தலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM