சிறைச்சாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : இன்று கொரோனா மரணங்கள் பதிவாக வில்லை!

Published By: Jayanthy

14 Nov, 2020 | 11:32 PM
image
  • 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
  • சிறைச்சாலைகளில் மேலும் கைதிகளுக்கு கொரோனா தொற்று
  • யாழில் தொற்றுக்குள்ளான 11 ஆவது நபர் அடையாளம்

நாட்டில் இன்று இரவு 10 மணிவரையான காலப்பகுதியில்  கொரோனா தொற்றுக்குள்ளான 389 பேர் அடைளாம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  5206 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இன்றையதினம் மேலும் 293 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 458 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று நாட்டில் கொரோனா மரணங்கள் பதிவாக வில்லை, இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை  53 ஆக உள்ளது. 

சிறைச்சாலைகளில் மேலும் கைதிகளுக்கு கொரோனா தொற்று!

இன்று பூசா சிறைச்சாலையின் மேலும் 44 கைதிகளுக்கும்,  கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் மேலும் 80 கைதிகளுக்கும், குருவிட்ட சிறைச்சாலையில் 14 பெண் கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பூசா சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறை கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த நாட்களில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

யாழில் தொற்றுக்குள்ளான 11 ஆவது நபர் அடையாளம்

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பேலியகொடை மீன் சந்தைக்கு வந்து சென்ற நிலையில் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில்14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு  பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வீடு திரும்பியுள்ளார்.

வீட்டில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தில் இருந்த இவருக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்  உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் 11ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08