- 389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
- சிறைச்சாலைகளில் மேலும் கைதிகளுக்கு கொரோனா தொற்று
- யாழில் தொற்றுக்குள்ளான 11 ஆவது நபர் அடையாளம்
நாட்டில் இன்று இரவு 10 மணிவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 389 பேர் அடைளாம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 5206 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இன்றையதினம் மேலும் 293 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதனையடுத்து நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,324 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று சந்தேகத்தில் 458 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று நாட்டில் கொரோனா மரணங்கள் பதிவாக வில்லை, இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆக உள்ளது.
சிறைச்சாலைகளில் மேலும் கைதிகளுக்கு கொரோனா தொற்று!
இன்று பூசா சிறைச்சாலையின் மேலும் 44 கைதிகளுக்கும், கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் மேலும் 80 கைதிகளுக்கும், குருவிட்ட சிறைச்சாலையில் 14 பெண் கைதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பூசா சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறை கைதிகளின் எண்ணிக்கை 329 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த நாட்களில் கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழில் தொற்றுக்குள்ளான 11 ஆவது நபர் அடையாளம்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் பேலியகொடை மீன் சந்தைக்கு வந்து சென்ற நிலையில் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்தில்14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து கடந்த முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வீடு திரும்பியுள்ளார்.
வீட்டில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தில் இருந்த இவருக்கு இன்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று கொத்தணி கண்டறியப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் 11ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM