(க.பிரசன்னா)
கொரோனா தொற்று நோய் நிலைமைகளின் போது போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் மற்றும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்காகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை விசேட இலவச தொடர்பு இலக்கத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
1927 என்ற இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர்.லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார்.
நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனை சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கும் நிலை காணப்படுகின்றது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உதவிச் சேவையின் மூலம் 24 மணிநேரமும் அழைப்பினை ஏற்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், குறித்த சேவைகளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய விரும்பிய மொழிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM