பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஊரடங்கு சட்டம் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டு பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தேசத்தின் பாதுகாப்பு அடுத்த 15 நாட்களுக்கு மாற்றப்படாமல் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஜனாதிபதியுடன் (இமானுவேல் மேக்ரான்) சேர்ந்து முடிவெடுத்துள்ளோம்.
இதன்படி, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் ஊரடங்கு விதிகள் தொடர்ந்து நீடிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்த நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா பாதிப்பின் 2 ஆவது அலை கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இதுவரை 19.15 இலட்சம் பேர் கொரோனா பாதிப்புகளுக்குள்ளளாகி உள்ளனர். 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM