(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி காணாத விதத்தில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபையில் தெரிவித்தார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் நிலைமையில் நாட்டின் தற்போதைய நடைமுறைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை இன்று பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியினர் கொண்டுவந்திருந்த நிலையில் விவாதத்தில் உரையாற்றிய போதே சுகாதார அமைச்சர் இதனைக் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக காணப்படவில்லை, வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளோம்.
இன்று நாட்டில் பரவலாக வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை, பேலியகொடை கொத்தணியில் இருந்தே நோயாளர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். எனவே வைரஸ் சமூக பரவலாக மாறும் நிலைமையை நாம் கட்டுப்படுத்தியுள்ளோம். இதில் சகலரும் ஒன்றிணைந்து நாடாக மீள்வோம், இதற்கு சகலரதும் ஒத்துழைப்புகள் அவசியம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM