மின்சாரக் கம்பங்களால் அச்சத்தில் மக்கள்

Published By: Digital Desk 4

13 Nov, 2020 | 12:37 PM
image

வவுனியா குடியிருப்பு கித்துள் வீதியில் அமைந்துள்ள பழமையான மின்சார கம்பங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது.

அதிக மக்கள் நடமாட்டமுள்ள குறித்த வீதியில் நாட்டப்பட்டுள்ள இரும்பினாலான மின்சார கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால் குறித்த கம்பங்கள் ஒருபக்கம் சரிந்த நிலையில் வீதிகரைகளில் நிற்கின்றமையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும், பயணிகளும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

குறித்த இரும்புக்கம்பங்கள் 40 வருடங்களிற்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளதுடன், அது சேதமடைந்து செல்லும் நிலையிலும் புதிய தூண்கள் இதுவரை நாட்டப்படவில்லை.

எனவே அதிகமக்கள் நடமாட்டம் கொண்ட வீதி என்பதை கருத்தில் கொண்டு அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறுவதற்கு முன்னர் குறித்த இரும்பு கம்பங்களை அகற்றி புதிய தூண்களை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை மின்சார சபையினர் முன்னெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32