ஒரு ஆசிரியர் வெறும் ஆசானாக மட்டுமில்லாமல், அந்த குழந்தைகளுக்கு தாயாகவும் செயல்பட வேண்டும் என்பதை மிக அழகாக ரசிகர்களுக்கு உணர்த்திய திரைப்படம், தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்'. அந்த படத்தில் ஆசிரியராக நடித்த ராதிகா பிரசித்தா, தன்னுடைய எளிமையான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும், அந்த கதாப்பாத்திரத்திற்கே உயிர் கொடுத்து இருக்கிறார் என்பதை சொல்லியே ஆக வேண்டும். ஒரே படத்தில் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பிடித்த ராதிகா, தற்போது இயக்குனர் விஜய் மில்டனின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கடுகு' படத்தில், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். 'ரஃப் நோட் புரோடக்ஷன்ஸ்' சார்பில் பாரத் சீனி தயாரித்து வரும் இந்த 'கடுகு' திரைப்படத்தில் மீண்டும் ஆசிரியராக ராதிகா பிரசித்தா நடிப்பது குறிப்பிடித்தக்கது.
"இரண்டாவது முறையாக நான் ஆசிரியர் வேடத்தில் நடிப்பதால், என்னுடைய 'குற்றம் கடிதல்' கதாப்பாத்திரத்தின் சாயல் சிறிதளவும் இருக்க கூடாது என்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம். அதற்காக எனது உடல் எடையையும் அதிகரித்துள்ளேன். நிச்சயம் எனது 'கடுகு' படத்தின் இந்த ஆசிரியர் கதாப்பாத்திரம் எந்தவகையிலும் என்னுடைய 'குற்றம் கடிதல்' ஆசிரியர் கதாப்பாத்திரத்தோடு ஒத்துப்போகாது.
"ஆண் - பெண் இருவரின் உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான் இந்த 'கடுகு' திரைப்படம். பொதுவாகவே ஒரு ஆணும் பெண்ணும் பழகினாலே அது காதலாக தான் இருக்க கூடும் என்ற கருத்து மக்களிடம் இருந்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி அவர்களிடையே புனிதமான நட்பும் இருக்கிறது. 'கடுகு' படத்தை பார்த்த பின் ரசிகர்கள் அதை உணருவர்.' என்று கூறுகிறார் 'கடுகு' படத்தின் கதாநாயகி ராதிகா பிரசித்தா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM