2021 வரை ஒத்தி வைக்கப்பட்ட 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்காக டொக்கியோவுக்கு வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் வீரர்களுக்கு ஜப்பானின் 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் விளையாட்டு வீரர்களும் குழுவினரும் ஜப்பானுக்கு வருகை தருவதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்குள் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை முன்வைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் வெளிநாட்டிலிருந்து வரும் பார்வையாளர்கள் குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்று ஒலிம்பிக் அமைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறெனினும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான சுகாதார ஆலோசனை விபரங்களை மேலும் தயாரிக்க வேண்டும் என டோக்கியோ 2020 தலைமை நிர்வாக அதிகாரி தோஷிரோ முட்டோ தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் போது தொற்று தடுப்பு நடைமுறைகள் குறித்து டோக்கியோ பெருநகர அரசாங்கத்தின் அதிகாரிகள், தேசிய அரசு மற்றும் டோக்கியோ 2020 அமைப்பாளர்கள் இடையே நடந்த சந்திப்பின் பின்னர் உரையோற்றும்போதே முட்டோ இதனை கூறியுள்ளார்.
தொற்றுநோய்களின் நிலையைப் பொறுத்து அடுத்த ஆண்டு வெளிநாட்டு பார்வையாளர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத் தலைவர் தோமஸ் பாக் அடுத்த வாரம் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு ஜப்பானுக்கு வருகை தரவுள்ளார். இதன்போது ஒலிம்பிக் போட்டிகளின்போது கொரோனா வைரஸ் எதிர் நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடப்படும் என்றும் முட்டோ குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை 2021 ஜூலை 23 தொடக்கம் ஆகஸ்ட் 8 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM