(க.பிரசன்னா)
கொரோனா நோய்த் தொற்று நிலைமையின் போது நபர்களினால் பயன்படுத்தப்படும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகள் உள்ள பிரதேசங்களுக்கும் மற்றும் பொதுவாக அனைத்து பிரதேசங்களுக்கும் ஏற்ற வகையில் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் குறித்த வழிகாட்டல் ஆலோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்களில் சிகிச்சை கழிவு பொருட்களை அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்கள், ஊழியர்களை பயன்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் உள்ளிட்ட கழிவு பொருட்களை அகற்றுவதற்கு மஞ்சள் நிற பைகளை பயன்படுத்த வேண்டும்.
இந்த பொதிகளில் போடப்படும் கழிவு பொருட்கள் எந்த வகையிலும் மீள்சுழற்சி செய்யப்படாமல் முறையாக அழிக்கப்பட வேண்டும்.
நோய்த் தொற்றை தடுப்பதற்காக பொது மக்கள் பயன்படுத்தும் பொருட்களை அகற்றும் பொழுது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும் என்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் இந்த ஆலோசனை வழிகாட்டியில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM