தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது 20 ஆவது திருத்தம் : கரு ஜயசூரிய குற்றச்சாட்டு

Published By: J.G.Stephan

11 Nov, 2020 | 03:25 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துடன் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள்.

அதனூடாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, மக்களின் ஒற்றுமையைப் பலிகொடுத்தேனும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது. 20 வது திருத்தம் ஒரு தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்பதையே மீண்டும் சுட்டிக்காட்டுகிறோம் என்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருக்கிறார்.



இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு  எதிரான போராட்டத்தில் அரசாங்கத்துடன் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நின்றார்கள்.

அதனூடாக வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, மக்களின் ஒற்றுமையைப் பலிகொடுத்தேனும் அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் தேவையாக இருந்தது.

ஆனால் தற்போதுவரை குறைந்தபட்சம் பொருட்களின் விலைகளிலேனும் மட்டுப்பாட்டைப் பேணுவதற்கு அரசாங்கம் தவறியிருக்கிறது.

நாங்கள் மீண்டும் கூறுகின்றோம். அரசியலமைப்பிற்கான 20 வது திருத்தம் என்பது உண்மையில் ஒரு தற்கொலை முயற்சி.

மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முக்கிய மைல்கல்லாகும்.

அந்தத் தடுப்பு மருந்து அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உலகத்தலைவர்கள், சர்வதேசக் கட்டமைப்புக்கள் ஒன்றிணைந்து உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

இதுவே மனிதாபிமானத்திற்கு ஏற்படக்கூடிய மிகப்பெரும் சவாலாக இருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02