ரோஹிங்கிய முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை வாக்களிப்பு நடவடிக்கையில் உள்ளீர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் திங்களன்று மியன்மாறுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ரோஹிங்கிய சமூகம் உட்பட நாட்டின் அனைத்து இன, மத மற்றும் சிறுபான்மை குழுக்களை முழுமையாக தேர்தல் கடமைகளில் உள்ளீர்த்து, அனைவரின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையகத்தின் செய்தித் தொடர்பாளர் நபிலா மஸ்ராலி ஒரு அறிக்கையில் மியன்மாரிடம் வலியுறுத்தியுள்ளார்.
27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழு மியான்மரை சர்வதேச தரங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு இணங்க தேர்தல் ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்தவும் அழைப்பு விடுத்துள்ளது.
சுமார் 54 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தநது.
இது 50 ஆண்டுகால இராணுவ ஆட்சி 2011 ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர் இடம்பெறும் இரண்டாவது பொதுத் தேர்தலாகும்.
90 க்கும் மேற்பட்ட கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 5,643 வேட்பாளர்கள் 1,171 தேசிய, மாநில மற்றும் பிராந்திய இடங்களுக்கு போட்டியிட்டனர்.
இதில் மியான்மரின் அரச ஆலோசகர் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தேர்தலில் மில்லியன் கணக்கான வாக்காளர்களை வாக்களிக்காததால் தேர்தல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
2015 தேர்தலுக்கு முன்னதாக ரோஹிங்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டமையினால் ராகைன், ஷான் மற்றும் கச்சின் உள்ளிட்ட மாநிலங்களின் பெரிய பகுதிகளிலும் வாக்களிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.
2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 740,000 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் மியான்மரை விட்டு, அண்டை நாடான பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM